என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தாக்க முயற்சி"
- வங்கி பெண் அதிகாரியை தாக்க முயன்ற கணவன்-மனைவி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை உத்தங்குடி, அம்பலக்காரன்பட்டி பகுதியைச் சேர்ந்த மச்சக்காளை மகள் திவ்யா (வயது 27). இவர் மதுரை தனியார் வங்கியில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் திவ்யா மாட்டுத்தாவணி போலீசில் ஒரு புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதில், நான் சென்னை வங்கியில் வேலை பார்த்தேன். அப்போது வளசர வாக்கத்தைச் சேர்ந்த ராம்பிரபு என்பவர் என்னி டம் தகாத முறையில் நடந்தார். இது தொடர்பாக சென்னை வடபழனி போலீசில் புகார் செய்தேன். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், நான் உத்தங்குடி பகுதியில் நடந்து சென்றேன். அப்போது அங்கு வந்த ராம்பிரபு, அவரது மனைவி மகா சூரிதா ஆகிய 2 பேரும் என்னை அவதூறாக பேசி அடிக்க பாய்ந்தனர். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
இதன் அடிப்படையில் மாட்டுத்தாவணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்